சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக நீண்ட காலம் சேவையாற்றிய ரொபேர்ட் முகாபே எவரும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, புதிய ஜனாதிபதியாக முன்னாள் உப ஜனாதிபதி எமர்ஸன் மனன்கக்வா நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார்.
ரொபேர்ட் முகாபேயால் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த எமர்ஸன் இரு வாரங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறி தென் ஆபிரிக்காவில் தஞ்சமடைந்திருந்தார்.
எமர்ஸனின் பணி நீக்கமானது அந்நாட்டு அரசாங்கத்தில் இராணுவம் தலையீடு செய்யவும் முகாபேயின் 37 வருட கால ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படவும் வழிவகை செய்தது.
முகாபே (93 வயது) பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான செய்தி வெளியானதும் அந்நாட்டு மக்கள் அதனை ஒரு விழாவாகக் கொண்டாடினர்.
பாராளுமன்றத்தில் முகாபேக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில் அவரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதமொன்று வாசிக்கப்பட்டது.
எதுவித தடையுமற்ற வகையில் அமைதியான அதிகார கைமாற்றம் இடம்பெறுவதற்கு வழியேற்படுத்தி தரும் வகையில் தான் பதவி விலகுவதாகவும் தனது தீர்மானம் தன்னால் சுயமாக எடுக்கப்பட்டுள்ளது எனவும் முகாபே அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் உப ஜனாதிபதி எமர்ஸன் (71 வயது) புதிய தேர்தல் இடம்பெறும் வரை முகாபேயின் பதவியை வகிக்கவுள்ளதாக ஆளும் ஸனு-பி.எப். கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.
அந்நாட்டின் புதிய தேர்தல்கள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் எமர்ஸன் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் சிம்பாப்வே ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.
தனது அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகள் தொடர்பில் 'முதலை' என அழைக்கப்படும் எமர்ஸன் தென் ஆபிரிக்காவிலிருந்து தன்னால் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில், நாட்டை மீளக்கட்டியெழுப்ப மக்க ளை ஐக்கியப்பட அழைப்பு விடுத் துள்ளார்.
பதவி விலகும்வரை தன்னை கடவுள் மட்டுமே பதவியிலிருந்து வெளியேற்ற முடியும் என உரிமைகோரி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM