முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் இரகசியமாக கடன்களை பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கூற்றை முற்றாக மறுத்துள்ள கூட்டு எதிர்க்கட்சி, உரிய விசாரணைகளை மேற்கொள்ளு மாறு வலியுறுத்தி சபாநாயகர் கருஜெய சூரியவிடத்தில் எழுத்துமூலமாக கோரி க்கை விடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் கருத்து வெளியிடுகையிலேயே இத்தகவலை வெளியிட்டனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விமல்வீரவன்ஸ, ரமேஷ் பத்திரன, மஹிந்த யாப்பா அபேவர்தன, ரஞ்சித் டி சொய்ஸா, வாசுதேவ நாணயக்கார, பிரியங்கர ஜயரத்ன, ஜனக்க பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கையளித்துள்ள குறித்த எழுத்துமூல ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஆட்சிக்காலத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இரகசியமாக கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாட்சியம் அளித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து ஊடகங்க ளும் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியலமைப்பின் 148சரத்தின் பிரகாரம் அரசாங்கம் என்ற வகையில் வெளி நாடுகளிலிருந்து நிதி பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அது பாராளுமன்றத்திற்கு வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் மத்திய வங்கியின் கணக்கறிக் கைகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவும் வேண் டும்.
ஆனால் பாராளுமன்ற கணக்காய்வு அறிக்கைகளிலோ அல்லது மத்திய வங்கி அறிக்கைகளிலோ அவ்வாறான எந்த விடயங்களும் குறிப்பிடப்படவில்லை. அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளிலும் இந்த விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
அதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அடிப்படையற்ற, பொய்யானதொன்றாகும். அக்கருத்தினை கூட்டு எதிர்க்கட்சியினராகிய நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். ஆகவே இந்த விடயம் சம்பந்தமாக சம்பந்தப் பட்டவர்களிடம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைவரம் எது வென்பதை பாராளுமன்றுக்கு அறிவிக் குமாறு கோருகின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM