"SLIA கட்டிட கலைஞர்கள் 2016" நிகழ்வு, எதிர்வரும் 16ம் திகதி “Flows: Touching the Void” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் 300க்கு மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் இடம்பெறவுள்ளதுடன், பொதுமக்கள்,தொழில்துறைசார் வல்லுனர்கள் ,மாணவர்கள் அடங்கலாக 100,000மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கட்டட நிர்மாணத்துறையுடன் சம்பந்தப்பட்ட தயாரிப்புக்கள் சேவைகளும் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன. இலங்கை கட்டட கலைஞர் நிறுவனத்தின் கட்டட கலை மாணவர்களின் ஆற்றல் திறன்களை வெளிப்படுத்துவதற்கான தனியான பகுதியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கட்டிட கலைஞர் நிறுவனம் பிந்திய சர்வதேச தொழில் நுட்பத்துடனான பல்வேறு தரமான தயாரிப்புக்களையும் கண்டறிவதற்கான சந்தர்ப்பத்தை நிறுவனம் உறுதிசெய்யவுள்ளது.
இலங்கை கட்டட கலைஞர்களின் நிறுவனத்தின் தேசிய அரசு பேரவையின் 1976ஆம் ஆண்டு சட்டத்திற்குட்பட்ட சரத்து 1 இன் கீழான சட்ட ரீதியிலான அதிகாரங்கள் இலங்கை கட்டட கலைஞர்களின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இத்துறை தொடர்பான கல்வி, பயிற்சி, கட்டட கலை தொடர்பான ஆய்வு, கற்கை நெறி, கலை மற்றும் இத்துறையுடன் தொடர்புபட்டவிஞ்ஞான ரீதியிலான நடவடிக்கைகளை மேம்படுத்துவதே SLIA நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM