கைமோசக் கொலைக்கு மற்றுமோர் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

Published By: Sindu

22 Nov, 2017 | 05:08 PM
image

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் மருமகனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைமோசக்கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாமனாருக்கு 7ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், அவரது மகனுக்கு 2ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் சரத்பாபு என்பவரை அவரது மனைவியின் தந்தையும் மற்றும் இரண்டு சகோதரர்களும் இணைந்து கொலை செய்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் வழக்கின் தீர்பானது இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் வழங்கப்பட்டிருந்தது.  இத் தீர்ப்பானது வாசிக்கப்படும் போது நீதிபதி சில விடயங்களை சுட்டிக்காட்டி இக் கொலை குற்றச்சாட்டை கொலை குற்றச்சாட்டில் இருந்து கைமோசக் கொலை குற்றத்திற்கு மாற்றியிருந்தார்.

அதாவது சம்ப தினத்தன்று தனது மகளை மருமகன் அடித்து சித்தரவதை செய்வதாக தொலைபேசி வாயிலாக தகவல்கிடைத்தையடுத்தே தாம் அங்கு சென்று மகளை காப்பாற்ற நடவடிக்கை எடுத்த போது மாமானாருக்கும், மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையிலேயே மருமகன் கத்திக்குத்துக்கு இலக்காயிருந்ததாகவும், குறிக்கப்பட்ட சகோதரன் ஹெல்மட்டால் அடித்ததாகவும் எதிரிகள் தரப்பால் சாட்சியத்தின் போது குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை மன்று கவனத்தில் எடுத்து சாட்சியங்களூடாக பரிசிலித்து இக் கொலை குற்றச்சாட்டை கைமோசக்கொலை குற்றச்சாட்டுக்கு மாற்றியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இதன்படி கைமோசக் கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக மாமானார் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளமையால் அவருக்கு ஏழாண்டு கடூழிய சிறை தண்டனையும், 10ஆயிரம் ரூபா தண்டப் பணமும் கட்டத்தவறின் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனையும், அதே போன்று சகோதரன் ஒருவருக்கு 2 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும் அது ஜந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறின் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனையும் மற்றைய சசோதரனை விடுவித்தும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26