நாஸாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று மாலை - இன்னும் சற்று நேரத்தில் - இலங்கையர்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியக் கதிர்கள் நம் பார்வையை மறைப்பதால் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் காண முடியாது.
இந்நிலையில், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மிகச் சரியாக இலங்கைக்கு நேர் மேலே இன்று (22) மாலை 6.25 மணிக்கு வரவிருக்கிறது. எனினும் ஐந்து நிமிடங்கள் வரையே இது இலங்கையின் விண் பரப்பில் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மனிதனால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாபெரும் விண்வெளி நிலையம் இது. 109 மீற்றர் நீளமும் 73 மீற்றர் அகலமும் கொண்ட இந்த விண்வெளி நிலையம், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது.
பதினெட்டு நாடுகளைச் சேர்ந்த 222 விண்வெளி ஆய்வாளர்கள் இந்நிலையத்தில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தற்போது 52வது குழுவாக, ஆறு பேர் இங்கு தங்கி ஆய்வுப் பணிகளைத் தொடர்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM