கொலம்பியா நாட்டின் 2வது பெரிய நகரமான மெடனிலுள்ள பாடசாலையில் ஆசிரியையாக வேலை செய்து வந்தவர் யொகாஸ்டா என்ற பெண், பாடசாலையில் படிக்கும் 16,17 வயது மாணவர்களுக்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
அந்த படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என மாணவர்களை வற்புறுத்தி வந்துள்ளார்.
அதிக மதிப்பெண் வேண்டுமென்றால் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் என பல மாணவர்களை வற்புறுத்தியது நீண்ட நாட்களாக வெளியே தெரியாமலே இருந்துள்ளது.
மேலும் சிறப்பு வகுப்பு என்று கூறி மாணவர்களை தன் வீட்டுக்கு அழைத்து உடலுறவில் ஈடுபட்டதாக தற்போது குறித்த ஆசிரியை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 மாணவர்களிடம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மாணவனின் தந்தை தனது மகனின் செல்போனில் ஆசிரியையின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக குறித்த மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய குறித்த ஆசிரியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குற்றம் நிரூபிக்கபட்டதால் ஆசிரியைக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களை மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் கொலம்பியா நாட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM