அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து மின்னேபொலிஸ் பிராந்தியத்துக்கு பயணத்தை மேற்கொண்ட டெல்ற்றா எயார்லைன்ஸ் விமானமொன்றில் இரு விமானப் பணிப்பெண்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையில் ஈடுபட்டதால் அந்த விமானம் திசைமாற்றப்பட்டு அவசரகால நிலைமையின் கீழ் சால்ட் லேக் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
மேற்படி விமானம் 37,000 அடி உயரத்தில் நடுவானில் பறந்த வேளை அந்த விமானத்திலிருந்த இரு பணிப்பெண்களிடையே கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த இரு பணிப்பெண்களும் ஒருவருக்கொருவர் கைமுஷ்டியால் குத்தி கட்டிப் பிடித்து சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் விமானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து சால்ட் லேக் நகரில் தரையிறக்கப்பட்ட அந்த விமானத்திலிருந்து மோதலில் ஈடுபட்ட இரு பணிப்பெண்களும் ஏனைய பணியாளர் ஒருவரும் ஒழுங்கீனமான நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து 80 நிமிட தாமதத்திற்குப் பின்னர் அந்த விமானம் மின்னேபொலிஸ் பிராந்தியத்துக்கு புறப்பட்டுள்ளது.
இதன்போது விமானசேவையானது தனது பணியாளர்கள் சிலரது ஒழுங்கீன நடவடிக்கைகளால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌ கரியங்களுக்காக மன்னிப்புக் கோரி யுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM