மன்னாரிலும் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

Published By: Digital Desk 7

22 Nov, 2017 | 12:37 PM
image

வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று  காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களும்  பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வடக்கு உற்பட நாடு முழுவதும் இன்று காலை 7 மணி தொடக்கம் 24 மணி நேரம் தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாதியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகள், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உற்பட மாவட்டத்தில் உள்ள  சில வைத்தியசாலைகளில் தாதிய உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் வெளி நோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாதியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தமது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்தரப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டால் உடனடியாக பணிப்பகிஸ்கரிப்பை கைவிட தயார் என குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38