வெலிமடை குருத்தலாவ பகுதியில் இருந்து வெலிமடை நகர பகுதிக்கு அனுமதி பத்திரம் இல்லாமல் லொறி ஒன்றில் ஒரு தொகை கிரான்டிஸ் என்ற மரப்பலகைகளை கொண்டு சென்ற ஒருவர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வெலிமடை ஹப்புத்தளை பிரதான வீதியில் வெலிமடை நகரப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் வைத்து குறித்த லொறியை வெலிமடை பொலிஸார் விசாரணைக்ககுட்படுத்தியபோது, சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் இல்லாமல் மரப்பலகைகளை மாலை நேரத்தில் கொண்டு செல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரப்பலகைகளின் பெறுமதி இரண்டு இலட்சத்திற்கு அதிகமான தொகை என பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து லொறியின் சாரதியை சந்தேகத்தின் பேரில் வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த சந்தேக நபரையும் லொறியையும் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM