இந்திய வம்சாவளியினர் இலங்கையராக மாறிவிட்டனர்.!

Published By: Robert

22 Nov, 2017 | 11:06 AM
image

இலங்­கையில் பொரு­ளா­தா­ரத்­திற்­காக தமது உதிரம், வியர்­வையைக் கொட்டி உழைத்து இறு­தியில் தேயிலைச் செடிக்கே உர­மா­கி­றார்கள் பெருந்­தோட்ட தமிழ் மலை­யகத் தொழி­லா­ளர்கள் என தெரி­வித்­துள்ள அமைச்சர்  லக் ஷ்மன் கிரி­யெல்ல,150 வரு­டங்­க­ளுக்கு முன்  இந்­தி­யா­வி­லி­ருந்து  தேயிலைத் தொழி­லுக்­காக  வெள்­ளைக்­கா­ரர்­களால்  தமிழ் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள்  இங்கு வர­வ­ழைக்­கப்­பட்­டார்கள். இன்று இந்­திய வம்­சா­வ­ளி­யினர்  இலங்­கை­யர்­க­ளாக மாறி­விட்­டனர். எனவே நாம் அவர்­களை எம்­ம­வர்­க­ளாக ஏற்­றுக்­கொண்டு எமது பொறுப்­பு­களைச் செய்ய வேண்டும் என்று உயர்­கல்வி நெடுஞ்­சா­லைகள் அமைச்­சரும் சபை முதல்­வ­ரு­மான  லக் ்ஷ்மன்  கிரி­யெல்ல  மேலும் தெரி­வித்­தார்.

இது தொடர்­பாக அமைச்சர் கிரி­யெல்ல மேலும் தெரி­வித்­ததா­வது; மலை­யக பெருந்­தோட்ட தமிழ் மக்கள்  நமது மக்கள்.  அவர்­களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்­டி­யது  எமது பொறுப்­பாகும்.

அந்த அடிப்­ப­டையில்  அம்­மக்­க­ளுக்கு  இல­வ­ச­மாக 07 பேர்ச் காணியும் வீடும்  அமைத்துக் கொடுக்க வேண்டும் என  நான் அமைச்­ச­ர­வைக்கு  முன்­வைத்த பிரே­ரணை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.  இக்­க­ட­மையை மலை­யக அமைச்­சர்­க­ளுடன் இணைந்து முன்­னெ­டுப்பேன்.

மேலும் தனது  உயிரை தேயிலைச் செடிகளுக்கு  உர­மாக்கும் பெருந்­தோட்ட தமிழ் தொழி­லா­ளர்­களின் வெள்­ளைக்­காரன் கட்­டிய லயன் காம்­பரா வீட்­டுத்­திட்­டங்­க­ளுக்கு  முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும். 

இவ்­வ­ளவு காலமும்  இலங்­கையில் ஐ.தே.கட்சி – ஐ.தே. முன்­னணி  என பிரித்து முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் அர­சியல் நடத்தி வந்தோம். இன்று அதற்கு  முற்­றுப்­புள்ளி வைத்து இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து நல்­லாட்சி  ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே  நிச்­சயம் மலை­ய­கத்தில்  விடியல் பிறக்கும். லயன் காம்­ப­ராக்கள்  தனித்­தனி வீடு­க­ளாக, கிரா­மங்­க­ளாக மாறும். 

பெருந்­தோட்ட  தமிழ் மக்­க­ளுக்கு  வைத்­தி­ய­சாலை வச­திகள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­படும். அதற்­காக  வெளி­நாட்டு நிதி நிறு­வ­னங்­களின் உத­வி­களும் பெற்றுக் கொள்­ளப்­படும்.

 இன்று மலை­ய­கத்தில் கல்­வியில்  மறு­ம­லர்ச்சி  தோன்­றி­யுள்­ளது.  சட்­டத்­த­ர­ணிகள், டாக்­டர்கள், அறிவு ஜீவிகள்  என பலர்  தோன்­றி­யுள்­ளனர். ஆனால்  அனை­வரும் மறை­மு­க­மாக  தம்மை சமூ­கத்தில் அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­ளாது  மலை­ய­கத்தான் எனக்­கூற  வெட்­கப்­பட்டு மறைந்து வாழ்­கி­றார்கள்.

இதி­லி­ருந்து அவர்­களை வெளியே கொண்­டு­வந்து  சமூ­கத்­திற்கு அடை­யாளம்  காட்ட வேண்டும்.  இது­போன்று  மேலும் பலரை உரு­வாக்க வேண்டும். இதனைச் செய்ய வேண்­டி­யது அர­சியல் வாதி­க­ளான  எமது பொறுப்­பாகும். இதனை நிச்­சயம் நான் செய்வேன்.

 கடந்த காலங்­களில் பெரு­ம­ள­வி­லான இளைஞர் – யுவ­திகள் பெருந்­தோட்­டங்­களை விட்டு  வெளி­யேறி கொழும்பில் தொழில் புரி­கின்­றனர்.  சிலர் தொழிலில் கொடி கட்டிக் பறக்­கின்­றனர். கொழும்­பி­லேயே  திரு­மணம் முடித்து நன்­றாக வாழ்­கி­றார்கள்.

 சிலர் சம்­பா­தித்து பணத்தைச் சீர­ழிக்­கி­றார்கள். இவர்கள் அனை­வ­ரையும் ஒன்று சேர்த்து புனர்­வாழ்­வ­ளித்து  மலை­யக சமூ­கத்தை  கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். இந்தியாவுக்குச் செல்ல விருப்பமானோரை அங்கு அனுப்பி வைத்தும், இலங்கையில் தங்கியிருக்க விரும்புவோரை  இங்கு வைத்தும் பராமரித்து அவர்களது வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டும் என்றார்.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17