அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாது­காப்பு அதி­க­ரிப்பு.!

Published By: Robert

22 Nov, 2017 | 10:18 AM
image

ஹைத­ரா­பாத்தில் நடை­பெற இருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி  டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­வதால் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு எதிர்­வரும் 28ஆம் திகதி ஹைத­ரா­பாத்தில் நடை­பெ­று­கி­றது. மாநாட்டை பிர­தமர் நரேந்­திர மோடி தொடங்கி வைக்­கிறார்.

இம்­மா­நாட்டில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்­கிறார். அமெ­ரிக்க தொழில் முனைவோர் குழு­வுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வரு­கிறார். ஹைத­ரா­பாத்தில் இவர் 3 நாட்கள் தங்­கு­கிறார்.

இவாங்கா ட்ரம்ப் வரு­கை­யை­யொட்டி ஹைத­ரா­பாத்தில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

ஹைத­ரா­பாத்தில் தங்கும் இவாங்கா ட்ரம்­புக்கு 5 அடுக்கு பாது­காப்பு கொடுக்­கப்­ப­டு­கி­றது. முதல் 2 அடுக்­கு­களில் அமெ­ரிக்க இரக­சிய பொலிஸார் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டு­கின்­றனர்.

இந்­திய சிறப்பு பாது­காப்பு படை­யினர் 3ஆவது அடுக்கு பாது­காப்பை கவ­னிக்­கின்­றனர். அதை­ய­டுத்து 4 மற்றும் 5-ஆவது அடுக்கு பாது­காப்பில் தெலுங்­கானா உளவுப் பிரிவு பாது­காப்பு பொலிஸார் ஈடு­ப­டு­கின்­றனர். இவர்கள் தீவி­ர­வாத தடுப்பு பயிற்சி மேற்­கொண்­ட­வர்கள்.

இவாங்­கா­வுக்கு மிரட்­டல்கள் இருப்­பதால் சர்­வ­தேச தொழில் முனைவோர் மாநாடு நடை­பெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர் வெஸ்டின் ஹோட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே உள்ளது. அதே நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதலமைச்சர் சந்திர சேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஹோட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது. 

இவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் இரகசிய பொலிஸ் குழு பல தடவை ஹைதராபாத் வந்து ஹோட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் இவாங்கா ட்ரம்ப் பயணம் செய்ய அமெரிக்க உளவுப்படை குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டு வருகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் வர வழைக்கப்படுகின்றன. மொத்தத்தில் அமெரிக்க ஜனாதி பதிக்குரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்தியாவுக் கான அமெரிக்க தூதர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13