ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு எதிர்வரும் 28ஆம் திகதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இம்மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். ஹைதராபாத்தில் இவர் 3 நாட்கள் தங்குகிறார்.
இவாங்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஹைதராபாத்தில் தங்கும் இவாங்கா ட்ரம்புக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. முதல் 2 அடுக்குகளில் அமெரிக்க இரகசிய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் 3ஆவது அடுக்கு பாதுகாப்பை கவனிக்கின்றனர். அதையடுத்து 4 மற்றும் 5-ஆவது அடுக்கு பாதுகாப்பில் தெலுங்கானா உளவுப் பிரிவு பாதுகாப்பு பொலிஸார் ஈடுபடுகின்றனர். இவர்கள் தீவிரவாத தடுப்பு பயிற்சி மேற்கொண்டவர்கள்.
இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் 3 கி.மீ சுற்றளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர் வெஸ்டின் ஹோட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே உள்ளது. அதே நேரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையிலும் தங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இங்கு தெலுங்கானா அரசு சார்பில் இவருக்கு முதலமைச்சர் சந்திர சேகரராவ் விருந்து அளிக்கிறார். அதற்காக இந்த அரண்மனை ஹோட்டல் போன்று மாற்றப்பட்டுள்ளது.
இவாங்கா வருகையையொட்டி அமெரிக்காவின் இரகசிய பொலிஸ் குழு பல தடவை ஹைதராபாத் வந்து ஹோட்டல்கள், மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இவாங்கா ட்ரம்ப் பயணம் செய்ய அமெரிக்க உளவுப்படை குண்டு துளைக்காத புல்லட்‘புரூப்’ கார்களை கொண்டு வருகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் வர வழைக்கப்படுகின்றன. மொத்தத்தில் அமெரிக்க ஜனாதி பதிக்குரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்தியாவுக் கான அமெரிக்க தூதர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM