நடப்பாண்டில் இதுவரையான காலப் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களால் 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த விபத்துக்கள் வருடாந்தம் மேலும் அதிகரித்து வருவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இக் காலப் பகுதியில் ரயில் குறுக்கு வீதிகளில், வாகனங்களுடன் ரயில் மோதிய சம்பவங்களில் 84 விபத்துக்களும், பயணிகள் ரயிலிலிருந்து விழுந்த 76 சம்பவங்களும், ரயில் வீதிகள் மற்றும் ரயில் வீதிக்கு குறுக்காக பயணித்தமையால் 436 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் வாகனங்கள் ரயில் குறுக்கு வீதிகளிலுள்ள வாயில்களில் மோதியமையால் 506 விபத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடந்த பத்து மாதங்களில் செல்பி எடுக்கும் முயற்சிகளால் ரயில் விபத்துக்களில் சிக்கி 24 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, ரயில் விபத்துக்களை குறைப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ரயில் குறுக்கு வீதிகளுக்கு அருகில் மக்களுக்கு தெளிவூட்டும் பதாகைகளை காட்சிப் படுத்தும் வேலைத் திட்டமும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM