கடந்த வருடத்தில் 39 ஆயிரத்து 199 வீதி விபத்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த விபத்துக்களினால் 3017 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் விபத்துகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு பதிலாக பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது உதய கம்மன்பில எம்.பி கேள்வி எழுப்பும் போது,
2016 ஆம் ஆண்டு வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் குறித்த விபத்துகளினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை யாது? 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் அதிகரித்த எண்ணிக்கை யாது? என்றார்.
இந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போது, கடந்த வருடத்தில் 39 ஆயிரத்து 199 வீதி விபத்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த விபத்துக்களினால் 3017 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 2014 ஆம் ஆண்டு 35 ஆயிரத்து 966 விபத்துகளும் 2015 இல் 38 ஆயிரத்து 107 விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. இதன்பிரகாரம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுடன் கடந்த ஆண்டுக்கான வீதி விபத்துகளை ஒப்பிடும் போது முறையே 3233 ஆகவும் 1092 ஆகவும் அதிகரித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM