பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நேற்று முற்பகல் 11.15 மணியளவில் கொல்லூர் அருகே உள்ள அரசிரூர் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வந்திறங்கிய பிரதமர், ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள விடுதி ஒன்றில் தயாராகிக் கொண்டு மூகாம்பிகை அம்மன் ஆலயத்துக்குச் சென்றார்.
நேற்று முற்பகல் 11.50 மணியளவில் அங்கு பிரதமருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.. முகாம்பிகை அம்மனை தரிசித்த பின்னர், அவர், சண்டிக ஹோமத்திலும் பங்கேற்றார்.
பிரதமரின் வருகையையொட்டி மூகாம்பிகை அம்மன் ஆலயப் பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், பிற்பகல்1.30 மணிவரை ஆலயத்துக்குள் பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம்திகதி இந்த ஆலயத்தில் வழிபாடுகளை செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெங்களூரு சென்றிருந்தார்.
எனினும், கடும் மழை பெய்து கொண்டிருந்த மோசமான காலநிலையால் ஆலய தரிசனத்தை கைவிட்டு கொழும்பு திரும்பும் நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பிரதமர் புதுடில்லிக்கான விஜயத்தின் போது நேற்று மூகாம்பிகை அம்மனை தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று கர்நாடகமாநிலம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து புதுடில்லி செல்லவுள்ளார். புதுடில்லியில் நாளை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்ததாகும். பிரதமருடன் அவரது மனைவி மைத்தி விக்கிரமசிங்க , அமைச்சர் சாகல ரட்ணாயக்க உட்பட பலரும் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM