பிந்திய செய்திகளின்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஸிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் அந்நாட்டு பாராளுமன்றில் ஆரம்பித்துள்ளது.
ஸிம்பாப்வே சுதந்திரம் பெற்ற 1980ஆம் ஆண்டு முதல் பிரதமராகப் பதவி வகித்த முகாபே, 1987ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து, கடந்த முப்பது வருட காலமாக அதே பதவியில் தொடர்ந்து வருபவர்.
தற்போது 93 வயதாகும் முகாபேயின் பதவியைத் தன்வசப்படுத்திக்கொள்ள அவரது மனைவி கிரேஸ் முகாபே முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
அதை நடைமுறைப்படுத்திக்கொள்வதற்காக அந்நாட்டு அரசியல் சட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்த முயன்றதாக முகாபே மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றே வந்தன.
கடந்த வாரம் அந்நாட்டில் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. என்றபோதும், தனது பதவியில் இருந்து விலக முகாபே மறுத்துவருகிறார்.
இந்நிலையிலேயே அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு, முகாபேயின் சொந்தக் கட்சியும் ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM