ஜனாதிபதிக்கு எதிராக சதி; கூறுகிறார் சரத் வீரசேகர

Published By: Devika

21 Nov, 2017 | 06:57 PM
image

இலங்கை இராணுவ வீரர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் மௌனம் சாதிப்பது ஜனாதிபதியை சிக்க வைப்பதற்கான சதிவேலையின் ஒரு அங்கமே என, கடற்படையின் முன்னாள் தளபதியும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சரத் வீரசேகர சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று (21) கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதைத் தெரிவித்தார்.

“நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்திருப்பதாக இலங்கை இராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதற்கு, ‘தாருஸ்மான்’ ஆணைக்குழுவின் அறிக்கையே காரணம். 

“எனினும், கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை சுமார் எட்டாயிரம் பேர் மட்டுமே என்று பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் லோர்ட் நஸபி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“மேலும், கொல்லப்பட்டவர்கள் சார்பில் இதுவரை எந்தவொரு முறைப்பாடும் ஐ.நா.வுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவரை இலங்கை அரசு பாராட்ட வேண்டும்.”

இதேவேளை, இராணுவ வீரர்களை குற்றவாளிகளாகச் சித்திரிக்கும் அறிக்கைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் மௌனம் காத்து வருவதாகவும் ஜனாதிபதியின் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் நோக்கிலேயே அவை இவ்வாறு நடந்துகொள்வதாகவும் தாம் சந்தேகிப்பதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடிபாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம்...

2024-04-18 15:48:16
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52