ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் கைது?!

Published By: Devika

21 Nov, 2017 | 05:06 PM
image

இராணுவ அதிரடிப் படையினரின் வீதிச் சோதனையின்போது ஆவா குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்குக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. பருத்தித்துறை, நீர்வேலியில் இக்கைது இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியொன்றைப் பரிசோதனை செய்த அதிரடிப் படையினர், சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைப் பறிமுதல் செய்தனர்.

சந்தேக நபர்களின் கைபேசிகளைப் பரிசோதனை செய்தபோது, அவற்றில் வாள்களுடன் இளைஞர்கள் நிற்கும் படங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஆவா குழு தலைவராகக் கருதப்படும் நிஷா விக்டர் என்பவர், பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோட முயற்சித்த குற்றத்தின் பேரில் ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51