புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள ஊழலுக்கு எதிரான விசேட நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறைமையின் மூலம் மத்திய வங்கி தொடர்பான விசாரணையை முதலில் நடத்தி காண்பிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் நீதியமைச்சருக்கு நேரடியாக சவால் விடுத்தார்.
இதன் ஊடாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள முடியுமானால் தனது நேர்மையை நிரூபித்து காண்பிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டத்தில் நீதி, சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் உரிய விசாரணை நடத்தி கோப் குழு அதன் அறிக்கையை வெளியிட்டு ஒரு வருடமாகின்றது. இந்நிலையில் ஏற்கனவே இது தொடர்பான பூரண விசாரணை அறிக்கையை கோப் குழு வெளியிட்ட தருவாயில் ஜனாதிபதியினால் பிறிதொரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த தருவாயில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இன்றும் (நேற்று) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சென்றுள்ளார். இதன்பிரகாரம் பிரதமர் சாட்சியமளித்த பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நிறைவு பெற்று விடும் என எதிர்பார்க்கின்றோம். எனினும் அதன் நடவடிக்கைகள் நிறைவு பெற்றாலும் ஆணைக்குழு தனது அறிக்கையை கொண்டு நேரடியாக குற்றவாளியை தண்டிக்க முடியாது. அதற்கு பதிலாக ஆணைக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும். அதன்பிற்பாடு ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த அறிக்கை அனுப்பிவைக்கப்படும். அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு வழக்கு தொடர்ந்து அது தொடர்பான தீர்ப்பு வருவதற்கு மூன்று ஆண்டுகள் செல்லும். அதன்போது இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலமும் நிறைவு பெற்று விடும். இதனையடுத்து மத்திய வங்கி மோசடி குற்றவாளிகள் தப்பித்து விடுவர். ஆகவே ஆணைக்குழுவின் அறிக்கையை பார்த்து கொண்டிருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காது. மத்திய வங்கி மோசடி என்பது சாதாரண விடயமல்ல. மிகவும் பாரதூரமானதாகும்.
இது இவ்வாறு இருக்கும் போது அண்மையில் ஊழல் ,மோசடிக்கு எதிராக விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு நீதியமைச்சர் முன்வைத்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
எனவே ஊழல் மோசடிக்கு எதிரான விசாரணையை விசேட நீதிமன்றத்தின் ஊடாக ஆரம்பிக்க முடியும். ஏனெனில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவராவிட்டாலும் தற்போதைக்கு கோப்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே குறித்த கோப் குழு அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோப் குழு அறிக்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு போதுமானதாகும். எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள கோப் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீதியமைச்சினால் ஸ்தாபிக்கப்படவுள்ள விசேட நீதிமன்றத்தின் ட்ரயல் அட்பார் விசாரணை முறைமையின் மூலம் மத்திய வங்கி மோசடி தொடர்பான விசாரணையை முன்னெடுக்க முடியும். எனவே தலதா அத்துகோரள நேர்மையான நீதியமைச்சராக இருந்தால் மத்திய வங்கி மோசடி தொடர்பில் புதிய விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்து காண்பியுங்கள். அதனை விசாரணைக்கு எடுத்து நீதியமைச்சர் தன்னுடைய நேர் மையை நிரூபித்து காண்பிக்கட்டும் என் றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM