உலகெங்கிலும் மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுடன் மருத்துவ விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கை சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்தி உயர்ந்த தரத்துடன் முன்கொண்டு செல்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள காட்சு சர்வதேச பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுநர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் மிகவும் முக்கியமான பிரிவான மருத்துவ ஆய்வுகூட சேவையிலுள்ள தொழில் வல்லுநர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி பட்டப்படிப்புவரை கொண்டுசெல்வதற்குத் தேவையான வழிகள் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை சுகாதார சேவையின் தரம் காரணமாக சர்வதேசத்தில் எமது நாட்டுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்காக சுகாதாரத்துறையிலுள்ள அனைத்து தொழில் வல்லுனர்களுக்கும் மக்களின் கௌரவம் கிடைக்குமெனக் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் நாடெங்கிலும் டெங்கு நோய் பரவிய சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை சேவையைத் துரிதப்படுத்தி மருத்துவ ஆய்வுகூட தொழில் வல்லுனர்கள் வழங்கிய ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டினார்.
இலவச சுகாதார சேவையைப் பலப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கேற்ப சுகாதாரத்துறையின் தரத்தையும் நியமங்களையும் மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM