இலங்கையில் இருந்து சுமார் 2 கோடி மதிப்பிலான 6 கிலோ மற்றும் 900 கிராம் மதிப்புடைய தங்கத்தை மண்டபத்தில் வைத்து க்யூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் இருந்து ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக மண்டபம் க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலையடுத்து மண்டபம் வடக்கு கடற்கரைப்பகுதிக்கு சென்ற பொலிஸார் நாட்டு படகில் சந்தேகத்திற்கிடமாக வந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபரை தடுத்து நிறுத்தி க்யூ பிரிவு பொலிஸார் விசாரணை செய்த போது,
குறித்த நபர் கீழக்கரையை சேர்ந்த நசீர் என்றும், அவர் இலங்கை யிலிருந்து நாட்டு படகு மூலம் மண்டபத்திற்கு தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த நபரிடமிருந்து இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 6 கிலோ மற்றும் 900 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மத்திய மாநில, உளவுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM