பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும், புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக எதிர்வரும் 22ஆம் ஆம் திகதி இந்தியாவின் புதுடெல்லிக்குச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களையும் நடத்தவுள்ளார்.
குறிப்பாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்தும் வகையில் இந்த சந்திப்புக்கள் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இலங்கையில் தற்போது முன்னெ
டுக்கப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விரைவில் செய்துகொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பாகவும் இதன்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட உயர்மட்டக் குழு வொன்றும் பிரதமருடன் புதுடில்லிக்குச் செல்லவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM