அதிகாரம் பறிக்கப்பட்ட சிம்பாப்வே ஜனாதிபதி றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார். அவரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்கிய அமைச்சர்கள் கைதாவார்கள் என தெரியவந்துள்ளது. சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதியான றொபர்ட் முகாபே (93) கடந்த 37 ஆண்டுகளாக இந்தப் பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் சிம்பாப்வேயில் திடீரென இராணுவ புரட்சி ஏற்பட்டது.
தலைநகர் ஹராரேயில் களம் இறங்கிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தது. ஜனாதிபதி ரொபர்ட் முகாபே கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, முகாபேக்கும் இராணுவத்துக்கும் இடையே சமரசப் பேச்சு வார்த்தையில் மூத்த கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் அயல் நாடான தென் ஆபிரிக்காவின் தூதர்கள் ஈடுபட்டனர்.
அப்போது இராணுவ உயரதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் டஸ்வாங்கிரையும் முகாபே தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்..
ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். அதைத் தொடர்ந்து தற்போது முகாபேயுடன் தென் ஆபிரிக்க வளர்ச்சிக் குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முகாபே பதவி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு எமர்சன் நங்காக் வாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிகாரம் பறிக்கப்பட்ட சிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார். அவரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்கிய அமைச்சர்கள், உயரதிகாரிகள் கைதாவார்கள் என தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM