சடலத்துக்கு நடந்த தலைமாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலை மாற்று சத்திரசிகிச்சை நடத்தமுடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இத்தாலி சத்திரசிகிச்சை வைத்தியர்கள்.
ரஷ்யாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று சத்திரசிகிச்சை நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த டாக்டர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று ஆபரேசன் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான சோதனை முயற்சிகளில் கனோவெரா ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில் தற்போது ஒரு சடலத்துக்கு தலைமாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டாக்டர் செர்ஜியோ கனாவெரோ தலைமையிலான குழுவினர் இந்த சத்திரசிகிச்சையை செய்துள்ளனர்.
சுமார் 18 மணி நேரம் இந்த சத்திரசிகிச்சை நடத்தப்பட்ட போது புது விதமான தொழில் நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் தண்டுவடம், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அனைத்தும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தலையுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இச்சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலை மாற்று ஆபரேசன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM