காலி கிந்தோட்டையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலையடுத்து இடம்பெற்ற கலவரத்தில் படுகாயமடைந்த ஒருவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்று காலை வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கடந்த செவ்வாய்க்கிழமை கிந்தோட்டை விதானகொட பிரதேசத்தில் கைக்குழந்தையுடன் வீதியில் நடந்துசென்ற முஸ்லிம் பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியுள்ளார். அவ்விபத்து இடம்பெற்ற வேளையில் அசம்பாவிதம் ஏதும் இடம்பெறாதபோதும் அதன் தொடர்ச்சியாகவே நேற்று முன்தினம் இரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை வேளையில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அப்பிரதேசத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தினூடாக பயணித்துள்ளனர். இதன்போது அந்த இளைஞர்களை சிங்கள இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் இரு தரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புபாடாத ஒருவர் மஹ்ரிப் தொழுகைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் வழிமறிக்கபட்டு தக்கப்பட்டுள்ளார். எனவே படுகாயங்களுக்குட்பட்ட அவர் காரபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதை அறிந்துகொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதற்கு முயற்சித்தனர். மேலும் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனையடுத்து இரவு 10.30 மணியளவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 19 பேரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 9 மணிவரை அப் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நிலைமை சுமுகமடைந்துள்ள நிலையில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பிரதேசத்தில் அமைதியை ஏற்படதையடுத்து நேற்று காலை காலி பொலிஸ் நிலையத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சம்பவத்தையடுத்து விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM