வட மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற ''ஆவா" குழுவினரை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடமாகாணத்தில் செயற்பட்டு வரும்' ஆவா"பாதாள குழுவினர் மீண்டும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இது தொடர்பில் ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகியுள்ளன. ஆவா குழுவினர் மீண்டும் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க நாம் இடமளிக்கமாட்டோம்.
கடந்த இரு தினங்களுக்குள் அவர்களின் 8 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அச்சம்பவங்களுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளுக்கான விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளும் முகமாக யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் விடுமுறைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி தெற்கிலும் இயங்கி வரும் பாதாள குழுவினரது செயற்பாட்டினை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் மறைந்துள்ள பாதாள குழுவினர் பற்றிய தகவல்கள் உட்பட அவர்களது செயற்பாடுகள் பற்றிய விடயங்
களை கண்டுபிடித்துள்ளோம். அவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM