படைவழங்கும் நாடுகள் போலித்தனமான விசாரணைகள் மேற்கொள்வதனை அனு மதிப்பதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை கையிலெடுக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்த அண்மைய 50 சம்பவங்களின் விசாரணை முடிவுகள் பற்றியும் முழுமையான விபரங்களை வெளியிடுமாறு இலங்கைக்கு சவால் விடுக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்கூவரில் நடைபெற்ற ஐ.நா. அமைதிகாக்கும் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை யின் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரட்ண, அசோசியேட்டட் பிரஸ் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், பாது காப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்த அண்மைய 50 சம்பவங்களும் அடிப்படையற்றவை எனவும் ஆதாரமற்றவை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த எல்லா சம்பவங்கள் தொடர்பிலும் இலங்கை விசாரணைகளை மேற்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவு பெற்று மூடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சுக்கா கூறுகையில்,
இந்தச் சம்பவங்கள் குறித்து தான் மேற்கொண்டதாகக் கூறும் விசாரணைகள் பற்றியும் அந்த விசாரணைகளின் முடிவுகள் பற்றியும் முழுமையான விபரங்களை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சவால் விடுக்கப்பட வேண்டும். அத்துடன் இந்த தகவல்கள் அனைத்தும் பகிரங்கப்படுத்தப்படுவதுடன் அவை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படவேண்டும்.
குறிப்பாக முறையிட்டவர்கள் யாரென்றே தெரியாத நிலையில் 50 சிக்கலான சம்பவங்களை ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் விசாரிப்பதென்பது மனித சக்திக்கு சாத்தியமற்றது. மிகச் சரியாக கூறுவதென்றால், நீதிச் செயல்முறையை நோக்கிய இவ்வாறான பொறுப்பற்ற அணுகு முறையானது இலங்கையில் எந்த ஒரு உள்நாட்டு செயல்முறையையும் வெளிப்படையாகவே நம்பமுடியாது என்பதால் அதனை மறுதலிக்கின்ற நிலைக்கே பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்றுள்ளது.
ஆண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இந்த குறிப்பிட்ட இவ் வழக்கினை நிச்சயமாக தனது சொந்த சாட்சியாளர் பாதுகாப்பு அமைப்பிலே விசாரிப்பது குற்றவாளிகளை கொண்டதும் குற்றஞ் செய்தவர்களே தங்களைத் தாங்கள் விசாரணை செய்வதாக அமையும் இலங்கை அரசாங்கம் அல்லாத ஆண் பாலியல் வன்முறை பற்றிய அனுபவம் கொண்ட சுயாதீனமான ஒரு சர்வதேச அமைப்பு மட்டுமே விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்புச் செயலாளரின் கூற்றானது, இலங்கை அரசு தான் அனுப்பிய அமைதிகாப்பாளர்களால் கெயிட்டியில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்புணர்வு பற்றிய குற்றச்சாட்டுகள் மீது எத்தகைய விசாரணைகளை மேற்கொண்டது என்பது பற்றிய கேள்வியையே எழுப்புகிறது.
2013 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள அனுப்பப்பட்ட இலங்கையின் மேஜர் ஜெனரல், பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவ அதிகாரிகளையோ அல்லது முறைப்பாடு செய்தவரையோ நேரடியாக விசாரிக்கவில்லை .
ஆனால் அவர் தனது படைச்சிப்பாயை குற்றத்திலிருந்து விடுவித்துவிட்டதாகவும் அவரே (அசோசியேட்டட் பிரஸிடம்) ஒத்துகொண்டுள்ளார். இல ங்கை அரசு இவ்வாறான விசாரணைகளைத்தான் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் அந்த 50 சம்பவங்கள் மீதும் மேற்கொண்டதா?
2004 மற்றும் 2007 இற்கு இடையிலான காலப்பகுதியில் 134 இராணுவத்தினருக்கு எதிரான சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பில், ஐ.நா வால் கண்டறியப்பட்ட அடிப்படை ஆதாரங்கள் இருப்பினும் அரசு எந்தவொரு குற்றவாளியையும் கைது செய்து சிறையிலடைக்க தவறி விட்டது.
இலங்கை மேலும் தனது அமைதிகாப்பாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு முன்னர் தனது பாதுகாப்பு படையினரை அவர்கள் செய்த குற்றங்களிலிருந்து வழமையாக விடுதலை செய்யும் அவர்களது இந்த அனைத்து விசாரணைகள் பற்றியும் கடுமையான வினாக்கள் கேட்கப்படவேண்டும்.
ஐக்கிய நாடுகள் அவை பூச்சியம் சகிப்புத்தன்மை என்பதற்கு அர்த்தம் ஒன்று உள்ளது என்பதனை உறுதிசெய்ய விரும்பினால், படைவழங்கும் நாடுகள் போலித்தனமான விசாரணைகள் மேற் கொள்வதனை அனுமதிப்பதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை கையிலெடுக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM