வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அத்துடன் அம்மாகாணத்தின் முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் தொடர்ந்து மக்களை கொதிப்படையச் செய்யும் வகையில் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். இந் நிலையில் எப்படி நாம் ஜனாதிபதியினதும் ஆளுநரின் அதிகாரத்தை குறைப்பது என துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், ஆணைக்குழுக்கள், திணைக்களங்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி ஒருவர் தன்னிடம் உள்ள அதியுச்ச அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கியமை இதுவே முதற்தடவையாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அவ்வாறு செய்துள்ளார்.
எனவே இது பாராட்டத் தக்க விடயமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து இனத்தவர்களின் பிரச்சினைகளை இனங்கண்ட தலைவராவார். எனினும் அவர் தொடர்ந்து முப்படையிரை பாதுகாப்பதாக கூறி வருகின்றார். முப்படையினர் விடயத்தில் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
இதன்படி இலங்கைக்கு சார்பாக கருத்து தெரிவித்த பிரிட்டனின் லோட் நெஸ்பிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார். இறுதி யுத்தத்தின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை. ஐந்தாயிரம் பேரளவிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி அதற்கு ஜனாதிபதி கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இவ்வாறு கடிதம் அனுப்புமாறு யாரும் அவருக்கு ஆலோசனை விடுக்கவில்லை. இந்த கடிதம் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டாலும் இன்று (நேற்று) பத்திரிகையில் வெளியானது.
எனினும் ஜனாதிபதி ஏனைய இனத்தவர்களின் குறைபாடுகளை மறந்து செயற்படவில்லை. அனைத்து இனத்தவர்களுடன் சமமாக செயற்பட்டு வருகின்றார். அவர் இனவாதி அல்ல.
அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக ஆணைக்குழு அமைக்கப்பட்ட போது இது மோசடியை மூடிமறைக்கும் செயற்பாடு என கூறினர். ஆனால் தற்போது பல்வேறு விடயங்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்தமுள்ளன. எனவே ஜனாதிபதியின் செயற்பாடுகள் நீதியானதும் நேர்மையானதுமாகும். அவர் நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்.
இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடயம் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அத்துடன் அம்மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மக்களை கொதிப்படைய செய்யும் வகையில் கருத்துகள் தெரிவிக்கும் நிலையில் எப்படி நாம் ஜனாதிபதியினதும் ஆளுனரதும் அதிகாரத்தை குறைப்பது? எனவே ஜனாதிபதி முறைமை தொடர்ந்து இருக்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்லது என்றார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM