மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் கோப்குழு விசாரித்த போது ஆளும் கட்சி எம். பிக்கள் சிலர் கணக்காய்வாளரை தூற் றினர். எனினும் இவர்கள் அனைவரும் தொலைபேசியின் ஊடாக அர்ஜுன அலோசியஸின் ஆலோசனைக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளனர் என்பது தற்போதுதான் எமக்கு விளங்குகின்றது.
எனவே இவர்கள் அர்ஜுன அலோசியஸுடன் தொலைபேசிய உரையாடியவற்றை உடன் சபைக்கு ஆற்றுப்படுத்தி ஹன்சாட் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும். இதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோப்குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி சபையில் கோரிக்கை விடுத்தார்.
கோப்குழு விசாரணையின் போது எம்.பி.க்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் தொலைபேசியில் உரையாடி இருந்தால் அது பாரிய தவறாகும். அத்துடன் கோப்குழுவிற்கு பாரிய சதித்திட்டம் இருந்த நிலையில் மத்திய வங்கி மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க முடிந்தமையினை நினைத்து நான் பெருமை அடைகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், பாராளுமன்றம், ஆணைக்குழுக்கள், திணைக்களங்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் நல்லாட்சி என்ற முத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது. இனிமேல் நல்லாட்சி என்று கூறிக்கொள்ள முடியாது. இதன்படி நேற்றைய தினம் (நேற்று முன் தினம்) கோப்குழு உறுப்பினர்கள் சிலரின் தொலைபேசி உரையாடல் இரகசியத்தை பிணைமுறி தொடர்பான விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. எனவே கோப்குழு உறுப்பினர்கள் இப்படி நடந்து கொண்டிருந்தால் அது பிழையான விடயமாகும். கோப்குழுவின் உறுப்பினர்களின் இவ்வாறான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிணைமுறி தொடர்பான கோப்குழு விசாரணை செய்த போது தொலைபேசியில் உரையாடியதாக கூறப்படும் ஐந்து பேர் அப்போது கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக செயற்பட்டனர். பிணைமுறி தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை முன்வைக்கப்பட்ட நேரத்தில் குறித்த ஐந்து பேரும் கணக்காய்வாளருக்கு இவ்வாறு செயற்படுவதற்கு அதிகாரம் இல்லை. கணக்காய்வாளர் நாயகத்திற்கு கண்டபடி செயற்பட முடியாது என வாதிட்டனர். எனினும் இவர்கள் யாருடைய கோரிக்கை பிரகாரம் செயற்பட்டனர் என்பது தற்போதுதான் தெரிகின்றது.
இதன்படி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான பேப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பிரதானி அர்ஜூன அலோசியஸின் ஆலோசனைக்கு அமையவே கணக்காய்வாளருக்கு எதிராகப் பேசியுள்ளனர். சாதாரணமாக மத்திய வங்கி அதிகாரிகளுடன் பேசி ஆலோசனை பெற்று பேசினாலும் பரவாயில்லை. எனினும் மோசடியின் பிரதான சந்தேக நபரிடமே பேசியுள்ளனர்.
எனவே மத்திய வங்கி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மாத்திரமல்ல. தற்போது வெளியாகியுள்ள ஐந்து பேரின் தொலைபேசி உரையாடலை சபைக்கு ஆற்றுப்படுத்த வேண்டும். ஏனெனில் கோப்குழு விசாரணை நடக்கும் போது தொலைபேசியில் பிரதான சந்தேக நபருடன் பேசியிருந்தால் அது தார்மீக பொறுப்புக்கு மாற்றமானது. அர்ஜுன அலோசியஸ் என்ன மத்திய வங்கியா? இல்லை. இவரே மோசடியின் பிரதானமானவராகும். ஆகவே தொலைபேசி உரையாடலில் என்னபேசினார்கள் என்பதனை மக்கள் அறிய வேண்டும். இதற்காக சபைக்கு ஆற்றுப்படுத்தி ஹன்சாட் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும். மத்திய வங்கி மோசடி தொடர்பான கோப்குழுவில் இவ்வளவு பாரிய சதித்திட்டம் இருந்தும் இது குறித்த அறிக்கை சமர்ப்பித்தமைக்காக தலைவர் என்ற வகையில் பெருமை அடைவதுடன் அது வெற்றியாகும்.
அத்துடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி ஆணைக்குழு நிறுவப்பட்டதுடன் அது பலமாக இருக்கும் என்றே நினைத்தோம். எனினும் நல்லாட்சியில் பலமாக்க வேண்டிய நிறுவனங்களைவலுவிழக்க செய்துள்ளீர்கள். குறிப்பாக கணக்காய்வு ஆணைக்குழு போன்ற சில ஆணைக்குழுவிற்கு எந்தவொரு பலமும் இல்லாமல் உள்ளது. கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஏன் அச்சம் கொள்கின்றது. எந்த நோக்கத்திற்கு கணக்காய்வு சட்டமூலத்தை முடக்குகின்றனர். உரிய அதிகாரம் வழங்கா விட்டால் கணக்காய்வு ஆணைக்குழுவை மூட வேண்டும். ஏனெனில் இந்த ஆணைக்குழுவினை நடத்தி செல்வதற்கு 20 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது.இதனால் அவர் கூட சிக்கலாம். கணக்காய்வு சட்டமூலம் இல்லை என்றால் ஆணைக்குழுவினை மூடிவிடுங்கள்.
அத்துடன்தற்போதைக்கு ஆணைக்குழுக்கள் பெயரளவிலேயே உள்ளன. மேலும் பாராளு மன்றத்தையும் நாம் மேலும் பலப்படுத்த வேண்டும். பொலிஸ் ஆணைக்குழு வின் செயற்பாட்டை பொறுத்தவரை உயர் பதவி வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. அரச ஊழியர் களின் பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவைகள் மந்தகதியில் உள்ளன. அரசிய லமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு ஆத ரவளித்தது அரச சேவையை சுயாதீனமா க்கவேயாகும். எனவே உரிய சேவை களை ஆணைக்குழுக்கள் செய்ய வேண்டும். எப்போது கணக்காய்வு சட்டமூலம் கொண்டு வரப்படும் என்பதனை அரசாங் கம் அறிவிக்க வேண்டும். நாணய ஒழுக்கவி யலை ஏற்படுத்துவதாயின் கணக்காய்வு சட்டமூலம் அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM