நவம்பர் மாதம் 22 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த வழக்கு வாபஸ் பெறப்படவில்லையென்றால் அரசியல் போக்கு வேறு பக்கமாக திசை திரும்பும் என்பதை ஜனாதிபதியும் அவரது சகாக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சி பிரதமகொரடாவுமான அநுரகுமர திஸநாயக்க சபையில் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.
நீதிமன்றத்தில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குவும் அவரது செயலாளருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அவரது கனிஷ்ட சட்டத்தரணிகளே ஆஜராகின்றனர். இது சரியாக முஸ்பாவுக்கு எதிராக முஸ்தபா என்ற நிலைமையே உள்ளது என்றும் சுட்டிக்காட்க்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஜனாதிபதி பிரதமர், எதிர்கட்சித்தலைவர், பாராளுமன்றம், ஆணைக்குழுக்கள், திணைக்களங்கள், ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக விடயத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ள நிலையில், சிறு குழுவொன்று தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தேர்தல்களை காலம் தாழ்த்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது.
குறிப்பாக ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் சிலர் தமது வஞ்சக அரசியலுக்காக நீதிமன்றை படுத்துகின்றனர்.
ற்போது ஆறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த ஆறு வழக்குகளுடன் தொடர்புடைய மனுதாரர்களுடன் தொடர்புடையவர்கள் பாராளுமன்றத்தினுள் இருக்கின்றனர். அவர்களது இந்த வஞ்சமான நோக்கம் எதற்காக என்பதை சபையில் உரியவர் வெளிப்படுத்த வேண்டும்.
இதில் ஒரு உதாரணத்தினை சுட்டிக்காட்டுக்கின்றனர். குறித்தவொரு வழக்கில் பிரதிவாதியாக அமைச்சர் பைசர் முஸ்தபாவும் அவரது அமைச்சின் செயலாளருமே குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் அதே பைசர் முஸ்தபாவின் கனிஸ்ட சட்ட தரணிகளேமனுதாரர்களில் ஆஜராகின்றனர் . மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் என இருதரப்பிலும் பைசர் முஸ்தபாவின் கனிஷ்;ட சட்டத்தரணிகளே ஆஜராகின்றனர். இது முஸ்தபா எதிர் முஸ்தபா வழக்காகவே அமைந்திருக்கின்றது. அத்தகைய நிலையில் அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏகாதிப்பதிய, ஜனநாயக விரோத போக்கு ஆட்சியை தோற்கடிப்பதே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கிடைத்த மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஜனாதிபதி சிறிசேன அதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆணைக்கு பயந்து இவ்வாறு செயற்படும் பட்சத்தில் ஜனாதிபதிக்கும் அவரது அணியினருக்கும் வரலாற்றில் கிடைக்கப் போகும் ஸ்தானம் என்னவென்பது இன்றிலிருந்து எழுதப்படும்.
மக்கள் ஆணைக்கு பயந்து இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு வரலாற்றில் என்ன இடம் கிடைத்திருக்கிறது. சூதாட்ட அடிப்படையிலான அரசியல் நிலைக்காது. ஜனாதிபதி பதவி ஆசனத்தில் அமர்ந்த பின்னர் கிடைத்த மக்கள் ஆணையை மறப்பது தான் இதுவரை காலமும் நடந்தேறியிருக்கினறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இரண்டு வருடங்களிலேயே தமக்கு கிடைத்த மக்கள் ஆணையை மறந்துவிட்டரோ என்ற சந்தேகம் எமக்கு எழுக்கின்றது.
தேர்தலை ஒத்திவைக்கும் வஞ்கமான முயற்சிகள் நிறுத்தப்படாவிட்டால் தங்களால் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாத தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்தாவது அதை தோற்கடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதனடிப்படையில் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்த வழக்கு வாபஸ் பெறப்படவில்லையென்றால் அரசியல் போக்கு வேறு பக்கமாக திசை திரும்பும் என்பதை ஜனாதிபதியும் அவரது சகாக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM