கல்முனை மாநகர சபையினை நான்கு பிரதேச சபைகளாக பிரித்து அதில் ஒன்றினை தமிழ் மக்களுக்கான அலகாக உருவாக்க தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே இவ்வாறு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் மக்களது பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று வெள்ளிக்கிழமை மாகாண சபைகள் உள்ளூராட்சிமன்ற அமைச்சில் இடம் பெற்றது.
அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தனுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், கோடீஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர் முஸ்லிம் கட்சிகளின் சார்பில் முஸ்லிம் காங்கிரஸின் உபதலைவரும் பிரதி அமைச்சருமான ஏ.எச்.எம்.ஹரீஸ், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, அசாத் சாலி ஆகியோரும் பங்கேற்றனர்.
சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சமத்துவமாக வாழ வேண்டும். இதற்கமைய கல்முனை மாநகர சபை நான்காக பிரிக்கப்படும் .
அவ்வாறு பிரிக்கப்படும் பிரதேச சபை களில் ஒரு சபை தனி தமிழ் மக்களின் கலாசாரங்களைப் பின்பற்றும் வகையில் செயற்படும். இதற்கு முஸ்லிம் தரப்பிடமிருந்து ஏகமனதாக இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றது. இந்நிலையில் கல்முனை விவகாரம் தீர்வினை எட்டியுள்ளது என்று கூறினார்.
இந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தும் முகமாக எதிர்வரும் 22 ஆம் திகதி அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் சந்தித்து கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு எதிர்க் கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிடுகையில் ,
இழுத்தடிக்கப்பட்ட இரு சமூகம் சார்ந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காண முடிந்துள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். எனவே தான் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வினை பெற்றுக்கொள்ள முடிந்தது. தமிழ் மக்களுக்கு தனியான பிரதேச சபை வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கைக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்தனர்.
இன்று கலந்துரையாடப்பட்ட விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுமாயின் கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிப்பதற்கு அனுமதி வழங்கமாட்டேன் . உள்ளூராட்சி சபை தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்
இந்த சந்திப்புக் குறித்து கருத்துத் தெரி வித்த தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கல்முனை மாநகர சபையை நான் காக பிரிப்பதற்கு தமிழ் முஸ்லிம் தலைவர் களிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. இது குறித்த எனது யோசனைகளும் பரிசீல னைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சுட்டிக்காட்டினார்..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM