4 வயது மகனை உயரத்தில் கட்டி தொங்க வைத்து, துன்புறுத்தி புகைப்படம் எடுத்த தாய்

Published By: Digital Desk 7

17 Nov, 2017 | 01:33 PM
image

சீனாவின் Leiyang நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தாய் ஒருவர் தனது 4 வயது மகனை கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தி அழவைத்து எடுத்த  புகைப்படத்தை தனது முன்னாள் கணவருக்கு அனுப்பியுள்ளார்.

 இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாத்தா, பாட்டி உடனடியாக குறித்த இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தை சீனாவின் Qingyuan  பகுதியில் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 2016ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

விவாகரத்து பெறப்பட்டதால் குழந்தையை வளர்ப்பதற்கு மாதம் ஒன்றிற்கு 2,000 யுவான் தருவதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொடுத்து வந்த அவர் இந்த மாதம் 1,000 யுவான் மட்டும் அனுப்பியுள்ளார்.

இதனால் பெரிதும் ஆத்திரமடைந்த குழந்தையின் தாய் உனது மகனை என்ன செய்கிறேன் பார் என்று கூறி இவ்வாறு கட்டிப்போட்டு அடித்து, துன்புறுத்தி அழவைத்து புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08