சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் குறித்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கணேசபுரத்திலுள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை முச்சக்கரவண்டியில் கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இரு இளைஞர்களையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு கணேசபுரம் மரக்காரம்பளையிலுள்ள தனது வீட்டிற்கு தனிமையில் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் அச்சிறுமியை முச்சக்கரவண்டியினுள் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு சென்று பாலியல் வல்றுவிற்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் உறவினர்கள் இது தொடர்பான முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.
இதையடுத்து குறித்த சிறுமி நஞ்சருந்தி தற்கொலை செய்வதற்கு முயன்றுள்ளார். இந்நிலையில் குறித்த உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அப்பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களை சந்தேகத்தில் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM