தொண்டமானின் பெயரை நீக்கிய விவகாரம் குறித்து இந்தியா கவனம் செலுத்தும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் கணக்கில் சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரில் இருந்து தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டது குறித்து சுஷ்மாவுக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதில், தமிழ் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நன்மதிப்புக்காகவும் உழைத்த முதுபெரும் தலைவர் தொண்டமானின் பெயரை அரச நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் இருந்து நீக்கியது அநீதியான செயல் என்றும் திட்டமிட்ட இந்த இருட்டடிப்பின் மூலம் இந்தியாவின் மீதான நன்மதிப்பையும் களங்கப்படுத்தியுள்ளது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சமூக மேம்பாட்டுக்காகப் போராடிய தலைவர்களின் பெயரும் புகழும் எந்த வகையிலும் யாரும் பாழ்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM