நல்லாட்சி அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5மணிக்கு நடைபெறவுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 10, 11, 13, 14, ஆகிய ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விவா
தம் நடைபெற்றதோடு ஆறாவது நாளாக இன்றும் விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இன்றைய வாக்கெடுப்பில் கூட்டு எதிர்க்கட்சியும், ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களிக்க இருப்பதோடு பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பில் இன்றைய தினமே தீர்மானிக்கவுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் குழுநிலையில் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தனித்தனியான விவாதங்கள் எதிர்வரும் டிசம்பர் எட்டாம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM