வட்டுவாகல் பாலத்தில் திடீர் வெடிப்பு; பயணிகள் அசௌகரியம்

Published By: Devika

15 Nov, 2017 | 07:57 PM
image

முல்லைத்தீவு - பரந்தன் A34 பிரதான வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தில் இன்று (15) மதியம் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கனரக வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நடைபயணிகளும் அவதானமாகச் செல்லாதவிடத்து கடும் காயங்களுக்குள்ளாகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

நீண்டகாலமாக சேதமடைந்திருந்த இப்பாலம் ஒருவழிப் பாதையாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று திடீரென பாலத்தின் நடுப்பகுதியில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. இதையடுத்து, கனரக வாகனங்கள் எவையும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் முல்லைதீவிலிருந்து செல்லும் பேருந்துகளும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இப்பாலம் முல்லைத்தீவுக்கு மிக முக்கியமான போக்குவரத்து மார்க்கத்தில் அமைந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது பாரிய சேதங்களையும் இது சந்தித்திருந்தது.

பாலத்தை புதிதாக அமைத்துத் தருமாறு பல தடவைகள் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அதற்கு எந்தவிதமான பயனும் இதுவரை கிட்டவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54