முல்லைத்தீவு - பரந்தன் A34 பிரதான வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தில் இன்று (15) மதியம் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கனரக வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நடைபயணிகளும் அவதானமாகச் செல்லாதவிடத்து கடும் காயங்களுக்குள்ளாகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
நீண்டகாலமாக சேதமடைந்திருந்த இப்பாலம் ஒருவழிப் பாதையாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று திடீரென பாலத்தின் நடுப்பகுதியில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. இதையடுத்து, கனரக வாகனங்கள் எவையும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முல்லைதீவிலிருந்து செல்லும் பேருந்துகளும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இப்பாலம் முல்லைத்தீவுக்கு மிக முக்கியமான போக்குவரத்து மார்க்கத்தில் அமைந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது பாரிய சேதங்களையும் இது சந்தித்திருந்தது.
பாலத்தை புதிதாக அமைத்துத் தருமாறு பல தடவைகள் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அதற்கு எந்தவிதமான பயனும் இதுவரை கிட்டவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM