புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்டதற்காக தடுத்து வைக்கப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஐந்து இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்குமாறு அரசுக்கு மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நயோமி கோல்மன் என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணியான பெண் அண்மையில் இலங்கை வந்திருந்தார். அவரது கையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி கட்டுநாயக்க பொலிஸார் அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர்.
மீயுயர் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் தீர்ப்பு இன்று (15) வழங்கப்பட்டது.
நயோமி புத்தரின் உருவத்தைப் பச்சை குத்திக்கொண்டது அவரது அடிப்படை மனித உரிமை என்றும், அவரைக் கைது செய்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நயோமிக்கு நட்ட ஈடாக ஐந்து இலட்ச ரூபாவையும், வழக்குக்காக அவர் செலவிட்ட இரண்டு இலட்ச ரூபாவையும் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், நயோமியை கைது செய்த கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் தலா ஐம்பதாயிரம் ரூபாவை நயோமிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM