மாவனெல்லை - ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கற்கும் மாணவக் குழுவொன்றும் அதே பாடசாலையின் உயர் தரத்தில் கற்கும் மாணவக் குழுவொன்றும் நடு வீதியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் போது இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் ஐந்து மாணவர்களை நேற்று காலை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஐந்து மாணவர்களும் நேற்று பிற்பகல் மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதுடன் இதன்போது அவர்கள் தலா ஐயாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளதுடன் இது தொடர்பிலான வழக்கு மீள அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நேற்று முன்தினம் மாலை குறித்த மாணவக் குழுக்கள் நடு வீதியில் மோதிக் கொண்டுள்ளமை தொடர்பில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து ஹெம்மாத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹெம்மாத்தகம பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஷோக பண்டார தலைமையிலான குழுவினர் விசாரணைகளை நடத்திய நிலையில், மோதலுடன் தொடர்புடைய ஐந்து மாணவர்களை நேற்று கைது செய்தனர்.
இதன்போது பொலிஸாரின் விசாரணைகளில், இரு மாணவக் குழுக்களிடையே நிலவிய பழைய பகைமை மோதலுக்கு காரணம் என தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM