உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதிக தொகுதிகளை வெற்றிகொள்வது உறுதியாகும். கட்சியை வெற்றிபெறச்செய்ய நினைப்பவர்கள் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அத்துடன் கட்சி யாப்பை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கட்சி அதிகமான கால அவகாசங்களை வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஷாந்த பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அமைப்பு நேற்று கட்சி காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சி அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவது உறுதியாகும். தேர்தல் முடிவுகளின் பின்னர் மக்கள் யாருடன் இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ளலாம். அத்துடன் சிலருக்கு கட்சியை பிளவுபடுத்த வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. இந்த நாசகார செயலுக்கு இளைஞர்கள் துணைபோகக்கூடாது.
அத்துடன் இதற்கு முன்னரும் கட்சியில் இருந்த பெரும் தலைவர்கள் கட்சியை விட்டு சென்று தனித்து தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர். ஆனால் அவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. பின்னர் மீண்டும் கட்சியில் இணைந்து செயற்பட்டனர். கட்சியில் இருந்து தலைவர்கள் பிரிந்து சென்றாலும் ஆதரவாளர்கள் எப்போதும் கட்சியுடனே இருப்பார்கள்.
மேலும் கூட்டு எதிர்க்கட்சி அனுராதபுரத்தில் நடத்திய பேரணியில் மக்கள் கூட்டம் இருந்தது. அதற்காக அவர்கள் எல்லோரும் அவர்களுடன்தான் இருக்கின்றனர் என்று தெரிவிக்கமுடியாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ்வின் பேரணிகளுக்கே அதிக மக்கள் கூட்டம் இருந்தது. ஆனால் தேர்தல் பெறுபேறுகள் எவ்வாறு அமைந்தன என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் மக்கள் கூட்டத்தை சேகரிப்பதன் மூலம் மக்கள் தங்களுடன் இருப்பதாக நினைக்கக்கூடாது.
அத்துடன் கட்சி உறுப்பினர்கள் கட்டாயம் கட்சி யாப்பை பின்பற்றி நடக்கவேண்டும். யாப்பை மீறி செயற்படும்போது கட்சி செயலிழந்து விடும். அத்துடன் கட்சி யாப்பை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல், எமது நிலைப்பாட்டை அவர்கள் விளங்கிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தோம். சிலர் குறுகிய காலத்திலே விளங்கிக்கொண்டு எம்முடன் இணைந்து கொண்டனர். சிலர் சிறிது காலம் சென்று இணைந்து கொண்டனர். என்றாலும் தொடர்ந்தும் கட்சி யாப்பை மீறிசெயற்படுபவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது. எதிர்காலத்தில் கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.
அத்துடன் கூட்டு எதிரணியில் இருப்பவர்களை இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பது பயத்தில் அல்ல. கட்சியில் இருக்கும் பற்றிலாகும். அத்துடன் அவர்கள் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் இல்லாமைக்கான காரணத்தை சந்தர்ப்பம் வரும்போது வெளிப்படுத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM