கம்பஹா பகுதியின் பிரபல வர்த்தகரான ஒஸ்மன் குணசேகரவை கொலை செய்வதற்காக வருகை தந்திருந்த போது, சந்தேக நபர்கள் கைவிட்டு தப்பிச் சென்றதாக நம்பப்படும், மூன்று ரீ–56 ரக துப்பாக்கிகள் இருந்த ஹைப்ரிட் ரக காரை வாடகைக்கு பெற்ற, பிணை கையொப்பமிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே காரை செலுத்திச் சென்ற சாரதியை பேலியகொடை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையிலேயே, விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக அவர்கள் இந்த இருவரையும் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பில் பல்வேறு தகவல்களையும் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.
குறித்த இரு சந்தேக நபர்களும் அயகம மற்றும் நிக்கவரட்டிய பகுதிகளில் வைத்து அங்கு சென்ற சிறப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
உடகமுல்ல பகுதியைச் சேர்ந்த நகரசபை ஊழியர் ஒருவரான 27 வயதான தாரக உதயங்க மற்றும் நிக்கவரட்டிய - கலகெதர பகுதியைச் சேர்ந்த 22 வயதான அசேன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக இவர்கள் பொலிஸ் பரிசோதகர் ஜயந்த தஹனக, உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.பியசிறி, கான்ஸ்டபிள்களான சுஜீவ நந்தன அனில் மற்றும் விஜேசிங்க ஆகியோர் கொண்ட குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாரக உதயங்கவை அயகம, இத்தேகந்த பகுதியில் மறைந்திருந்த போதும், அசேனை அவரது வீட்டில் வைத்தும் கைது செய்ததாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் கைதான இருவரிடமும் முன்னெடுத்த விசாரணைகளில் மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
அதன்படி சூட்டி உக்குன் என்னும் பாதாள உலக தலைவனின் கீழ் செயற்பட்ட குழுவின் உறுப்பினரான மட்டக்குளி - சமிட்புரவைச் சேர்ந்த அசங்க சம்பத் குமாரவிடம் ஒருவர் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்றுத்தருமாறு கோரியுள்ளார்.
அவர் பன்னிப்பிட்டிய பகுதியில் கார் ஒன்றினை வாடகைக்கு எடுக்க சென்ற போது அவர் அப்பிரதேசத்தை சேர்ந்தவர் அல்ல என்பதை காரணம் காட்டி அவருக்கு காரை வழங்க குறித்த வாடகைக் கார் நிலையம் மறுத்துள்ளது. இதனையடுத்தே அசங்க தனது நண்பரான தாரக உதயங்கவின் உதவியை நாடியுள்ளார். கதிர்காமத்துக்கு போவதற்காக காரைப் பெற்றுத் தருமாறே அசங்க தன்னிடம் கோரியதாகவும், அதன்படியே தனது உதவியாளரான அசேனுடன் சென்று காரை பெற்றதாகவும் தாரக உதயங்க பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி காரைப் பெற்று வரும் போது தான் காரில் இருந்து தேவை ஒன்றுக்காக இறங்கிய சமயம், அசங்க காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும், அது தொடர்பில் தொலைபேசியில் வினவிய போது, நண்பர் ஒருவருக்கு அவசர தேவைக்காக கொண்டு சென்றதாக கூறியதாகவும் தாரக உதயங்க தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த காரில் துப்பாக்கிகள் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அசங்க தம்மை தலைமறைவாக இருக்குமாறு கூறியதாகவும் அதன்படியே தான் தலைமறைவாக இருந்ததாகவும் தாரக உதயங்க கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM