ஈரான் - ஈராக் எல்லையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகும் நில அதிர்வுகள் நேற்று காலை வரை தொடர்ந்து கொண்டே இருந்தமையால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது,
‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை நில அதிர்வுகள் தொடர்ந்தன. ஈராக்கின் வடக்கில் குர்திஸ் பகுதியில் உள்ள சுலைமானியா நகரின் தென்கிழக்குப் பகுதியில் ஹலாப்ஜா என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது’’ என்று உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு குவைத், துபாய், பாகிஸ்தான் பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஈரான் நாட்டின் சர்போர்-இ-சஹாப் நகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஈராக்கில் 7 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நிலநடுக்க பாதிப்பு உள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் அவசர நிலையை சுலைமானியா அதிகாரிகள் பிரகடனப்படுத்தினர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் 6.6 ரிச்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க பாம் நகரம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் 26 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து செய்திகளை வெளியிட்டு வரும் அல் ஜஸீரா நிருபர் இம்ரான் கான் கூறும்போது,
‘‘வழக்கமாக பாக்தாத் நகரம் நில நடுக்கத்துக்குட்பட்ட பகுதிகளில் வரவில்லை. ஆனால் நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டது. முதலில் வெடிகுண்டுதான் வெடித்து சிதறியது என்று எண்ணினேன். சில விநாடிகளுக்குப் பிறகுதான் நிலநடுக்கம் என்பதை உணர்ந்தேன். வீதிகளுக்கு ஓடிவந்த மக்கள் முகத்திலும் நிலநடுக்கத்தின் பீதி இருந்தது’’ என்றார்.
மேலதிக தகவல்களுக்கு,
7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM