வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்தில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய மாணவனொருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில், ஏனைய இரு மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகே அமைந்துள்ள பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரான முதியவரிடம் தொலைவிலுள்ள பொருளை காட்டி அதனை எடுத்துத்தருமாறு கேட்டுள்ளனர்.
அதனை வர்த்தக நிலைய உரிமையாளர் எடுத்துவரச் சென்ற சமயத்தில் மற்றைய மாணவனொருவன் வர்த்தக நிலையத்திலிருந்த நூடில்ஸ் பொதியினை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
இதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த மாணவர்களை மடக்கிப்பிடித்த சமயத்தில் இரு மாணவர்கள் தப்பியோடியுள்ளனர்.
உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த மாணவனை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM