இலங்கையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்குள் 83 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் சிறுபான்மையினத்தவர்களை சேர்ந்தவர்களாவர் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு சபைக்கு தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு சபைக்கு ஆற்றுப்படுத்திய தகவலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிமல் ரத்நாயக்க எம்.பி. கேள்வி எழுப்பும் போது,
2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் பெயர் பட்டியல் ஒவ்வொரு வருடங்களுக்கமைய வெவ்வேறாக சமர்ப்பிக்கப்படுமா? ஜனாதிபதி சட்டத்தரணிகள் பெயரிடப்படும் போது பின்பற்றப்படும் முறையியல் யாது என்றார்.
இந்த கேள்விக்கு சபையில் ஆற்றுப்படுத்திய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்குள் 83 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி 2010 ஆம் ஆண்டில் 12 பேரும், 2011 இல் 2 பேரும், 2012 இல் 24 பேரும்,2013 இல் 2 பேரும், 2014 இல் 8 பேரும்,2015 இல் 2 பேரும்,2016 இல் 5 பேரும், நடப்பாண்டில் இதுவரை 28 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் சிறுபான்மையினத்தவர்களாவர். இந்த பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் உள்ளடங்குகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM