எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் எங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ரம்பொட ஸ்ரீ கல்கி மாணவர் சேவா அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ரம்பொட தொண்டமான் கலாசார மண்டபத்தில் நேற்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொத்மலை மற்றும் உடபலாத்த பிரதேசங்களில் சித்தி பெற்ற மாணவ, மாணவிகள் பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், கல்வித்துறையை சேர்ந்தவர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்குரிய வரவு–செலவு திட்டமானது இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக அமையும். இந்த வரவு–செலவு திட்டமானது மலையகம், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு வாழ் மக்கள் தனித்து சொந்த வீடுகளில் வாழும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளது.
சூழலுக்கு ஏற்ப தனிவீடுகள் அமைக்கப்பட்டு சுதந்திரமாக வாழக்கூடிய வசதி இந்த வரவு–செலவு திட்டத்தின் ஊடாக ஏற்படவுள்ளது. வரவு–செலவு திட்டத்தின் வாதப் பிரதிவாதங்கள் பாராளுமன்றத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம்பெறும். இதன்பின் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் இவர்களுக்கு கிட்டும். அந்த நிலையில் எங்களை எதிர்த்து பிரசாரம் செய்யும் எதிரணியின் வாய் அடைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
சமீபத்தில் பாராளுமன்றத்திற்கு நடிகர்கள் வருகை தந்தார்கள். அதை மக்கள் கண்டிருப்பீர்கள். இந்த நடிகர்கள் தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக செயற்படுபவர்கள். அரசியல் யாப்பு வரக்கூடாது என்பதை தெரிவித்தவர்கள் யார்?
இவர்கள் இந்த நாட்டில் பௌத்த மக்களுக்கு தனி ஒரு இடம் இல்லாமல் போய்விடும் என்று கூறிக்கொண்டே இந்த அரசியல் யாப்பை எதிர்த்து நின்றார்கள். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல இவர்கள்.
நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளை போல் இருக்க மாட்டோம். முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தன காலத்தில் இருந்து நிலையான அரசியல் யாப்பு அனைத்து மக்களையும் காப்பாற்ற கூடிய வகையில் அமைந்திராத சூழ்நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பு அனைத்து மக்களையும் காக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பது அனைத்து மக்களாலும் வரவேற்கத்தக்க கூடியதாக இருக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM