இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான விசேட வர்த்தக வரியை அரசாங்கம் குறைத்துள்ளது.
எனவே அதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையுமாக இருந்தால் பகல் உணவுப்பொதி ஒன்றின் விலையை பத்து ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் ஆறு உணவுப்பொருட்களின் விசேட வர்த்தக வரியை கடந்த புதன் கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கும் வரும் வகையில் குறைப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். எனவே உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ள நிலையில் சிற்றுண்டிச்சாலைகளில் விற்படும் உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் 2018 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்துள்ள வரவு-செலவுத்திட்டத்தில் மக்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. எனினும் சில துறைகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அச்சலுகைகளை மக்கள் அடைந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் இல்லை. ஆகவே அவ்வரிச்சலுகை இறக்குமதியாளர்கள் உட்பட வர்த்தக சமூகத்தினருக்கே கிடைக்கவுள்ளது.
எனவே இறக்குமதிசெய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு,தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் என்பவற்றுக்கான விசேட வர்த்தக வரி குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளபோதிலும் அதன் பலன் நுகர்வோருக்கு கிடைக்கப்போவதில்லை என்றார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM