முல்லைத்தீவு - மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக அக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைக்க முடியும்? எனவும், குறித்த நபரின் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்ட நடைமுறைகளுக்கப்பால் தனிநபர் ஒருவர் பெருமளவுக் காணியினை கையகப்படுத்த முயல்வதன் பின்னணியில் அரசியலா? அல்லது அதிகாரிகளின் துணையா உள்ளது? என மாங்குளம் பொது அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.
தனிநபர் ஒருவர் வலுக்கட்டாயமாக காணியை பிடிப்பதற்கு எதிராக அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தவும் தயாராகவுள்ளோம் என பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM