(டி.ரஸ்மிலா)
இந்து சமுத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அமெரிக்காவைத் தொடர்ந்து சீன இராணுவத்தின் குய் ஜிகுவாங் போர் பயிற்சி கப்பலொன்று இன்று காலை இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
உத்தியோகபூர்வமாக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர்.
சுமார் நீளம் 165.3 மீற்றர் கொண்ட 9000 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப்பல், 4 நாட்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும், எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுமூக உறவை மேலும் வளப்படுத்துதல், அனுபவ பரிமாற்றம், நல்லெண்ண மற்றும் பயிற்சிகள் நோக்கில் இலங்கை வந்துள்ள இந்த போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் போது, இன்றும் நாளையும் இலங்கை கடற்படையினருடன் பல்வேறு நிபுணத்துவ பயிற்சி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, இந்த சீன போர் பயிற்சி கப்பலை பார்வையிடுவதற்கான வாய்ப்புகள் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட குய் ஜிகுவாங் கப்பல் கடந்த பெப்ரவரி மாதம் சீன இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
1528 தொடக்கம் 1588 சீனாவின் மிங் வம்சத்தின் இராணுவத் தளபதியாக செயற்பட்டார். 16 ஆம் நூற்றாண்டில் சீனாவின் கரையோர பகுதிகளில் காணப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது குய் ஜிகுவாங் நன்கு அறியப்பட்டவர். எனவே சீன அரசு இந்த கப்பலுக்கு அவரின் பெயரை வைத்துள்ளது.
புகழ்பெற்ற மரபுகளைச் பாதுகாத்தல் மற்றும் சிறந்த கடற்படை சேவையாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் பாதுகாப்பு துறைசார் இராஜதந்திரத்தை முன்னெடுப்பது குய் ஜிகுவாங் கப்பலின் இலக்குகளாக காணப்படுகின்றது.
கடந்த மூன்று வாரத்திலிருந்து இன்று வரையில் இந்தோனேஷியா, தென்கொரியா, பங்களாதேஷ், அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் போர்க்கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டன. இதனைத் தொடர்ந்தே சீனாவின் போர்க்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
பல முக்கிய நாடுகளின் போர்க் கப்பல்கள் இலங்கையை நோக்கி நகர்த்தப்படுகின்றமை இந்து சமுத்திரத்தின் மீதான ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலேயே காணப்படுகின்றன.
இதுவரையில் இலங்கையை வந்தடைந்த அனைத்து கப்பல்களும் நல்லெண்ண விஜயத்தின் அடைப்படையிலேயே வருவதாக அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் அந்த விஜயங்கள் இந்து சமுத்திரத்தின் கடல்சார் பன்னாட்டு இராஜதந்திர நகர்வுகளை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது என இராஜதந்திரி ஒருவர் கருத்து வெளியிட்டார்.
இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு உயர்ந்தே காணப்படுகின்றது. இதற்கு அமைவாகவே ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அமெரிக்க பாதுகாப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை இந்து சமுத்திரத்தில் ஏற்பட கூடிய புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கையின் ஒத்துழைப்புகள் இன்றியமையாதவையாகியுள்ளன.
இதேவேளை, சீனாவின் நகர்வுகளும் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM