சவூதி அரேபியாவின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் நயிப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் முடிக்குரிய இளவரசர் நிலையிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் அந்நாட்டில் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் இலக்குவைக்கப்பட்ட பிந்திய அரச குடும்ப அங்கத்தவராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நடவடிக்கையின் பிரகாரம் இளவரசர் மொஹமட் பின் நயிப்பினதும் அவரது நேரடி உறவினர்களதும் வங்கிக் கணக்குகள் சவூதி அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் அந்நாட்டைச் சேர்ந்த 11 இளவரசர்களும் 4 அமைச்சர்களும் பல முன்னாள் அமைச்சர்களும் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது அந்நாட்டு தற்போதைய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், தனக்கு சவாலாக இருப்பவர்களை அகற்றி தான் அதிகாரத்துக்கு வருவதை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொண்ட ஒரு செயற்பாடாக நோக்கப்படுகிறது.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தொகையான கைதுகள் மனித உரிமைகள் தொடர்பான கவலையை அதிகரிப்பதாகவுள்ளதாக அமெ ரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணி ப்பகம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM