நபரொருவர் தனது மனைவியை 6 வருடங்களாக ஜன்னல்கள் மரச்சட்டத்தால் அடைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர்களைக் கொண்ட வீட்டில் பாலியல் கைதியாக அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்து வந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
ததார் முஸ்லிம்களுக்கான வாழ்க்கைத் துணைகளை தேடுவதற்கான இணையத்தள பக்கத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமான றினாத் பில்யனோவ் என்ற மேற்படி நபரும் லிலியா என்ற குறிப்பிட்ட பெண்ணும் சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்து இணைந்து வாழ ஆரம்பித்தனர்.
இதன்போதே றினாத் மொஸ்கோ பிராந்தியத்தில் புஷிகினோ எனும் இடத்திலுள்ள சூரிய ஒளி உட்பிரவேசிக்க முடியாத வகையில் அடைக்கப்பட்டிருந்த வீட்டில் லிலிலாவை சிறை வைத்துள்ளார்.
அவர் லிலிலாவை பாலியல் அடிமையாக நடத்தியதுடன் அடித்து உதைத்து சித்திரவதை செய்தும் வந்துள்ளார்.
இந்த சிறை வாழ்க்கையின் போது லிலிலா 4 தடவைகள் கர்ப்பமடைந்து 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்நிலையில் அந்தக் குழந்தைகளும் அவருடன் அதே வீட்டில் பணயக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
லிலிலாவின் பெற்றோர் தனக்கு 2.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை வழங்கினால் மட்டுமே அவரை அங்கிருந்து செல்வதற்கு அனுமதிக்க முடியும் என றினாத் அவருக்கு நிபந்தனை விதித்துள்ளார்.
தனது பிள்ளைகளுக்கு லிலிலாவை ஒரு பிசாசு என றினாத் தெரிவித்து அவர்களை அச்சமடைய வைத்திருந்தார்.
அத்துடன் பிள்ளைகளுக்கு அவர்கள் வளர்ந்ததும் இதுபோன்று லிலிலாவை அடித்து உதைக்க வேண்டும் என அவர் போதனை செய்து வந்துள்ளார்.
அந்தப் பிள்ளைகள் லிலிலாவுடன் அதே வீட்டில் வாழ்ந்த போதும், றினாத் இடையிடையே அவர்களை வெளியில் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் லிலிலா இந்த வாரம் ஒருவாறாக பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தனது அவல நிலை குறித்து அறிவித்ததையடுத்து அவரும் அவரது 4 பிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டபோது அந்தப் பிள்ளைகள் இயல்பாகப் பேச முடியாத நிலையில் காணப்பட்டதாகவும் லிலிலாவும் அவரது பிள்ளைகளும் தற்போது பெண்களுக்கான நிலையமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM