கிளிநொச்சி திருமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் வசித்து வரும் இளம் தம்பதிகளான குமாரவேல் டினேஸ் ஜான்சன் மற்றும் ஜான்சன் அன்புமணி ஆகியோரின் 3½ மாத ஆண் குழந்தை ஜான்சன் விரன் படுக்கையில் இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பெற்றோர் இருவரும் அறிவியல் நகரிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் மழை வெள்ளப்பாதிப்புக்களுடன் பாதுகாப்பற்ற வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாகவும் சம்பவ தினம் அன்றும் கடுங் குளிரும் மழையும் ஏற்பட்ட நிலையில் அதீத குளிர் காரணமாக விறைப்பு ஏற்பட்டு குழந்தை இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் மரண விசாரணையை மேற்கொண்ட கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரியினால் மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் உடல் உறுப்புக்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM