விஷமத்தனமாக செயற்படும் உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் தொடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸ் அதிகாரிகள் சிலரின் தவறான செயற்பாடுகள் காரணமாக இன்று பொலிஸ் திணைக்களம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே பொலிஸை சுத்தப்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. பின்கதவால் வந்து அரசியல் பலத்தினால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றுவோருக்கு இனி அந்த பதவியில் நீடிக்க முடியாது என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிப்பது மற்றும் இடமாற்றம் செய்வது, பதவி உயர்த்துவது தொடர்பில் திறமை அடிப்படையிலான புள்ளித்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.
இன்று பொலிஸ் சேவையானது சில தவறான அதிகாரிகள் காரணமாக சாதாரண மக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் பொலிஸை சுத்தப்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. அதன்படி முதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அங்கிருந்து சுத்தப்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
50 வீதமான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிறந்த அதிகாரிகளாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 50 வீதமானோர் தொடர்பில் சுத்தப்படுத்தல் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. பின் கதவுகளால் வந்து அரசியல் பலத்தின் உதவியுடன் அப்பதவிகளில் அமர்ந்திருப்போருக்கு இனியும் அந்த பதவிகளில் நீடித்திருக்க முடியாது.
அதேபோன்று விஷமத்தனமாக செயற் படும் சில உதவி பொலிஸ் அத்தி யட் சர்களும் உள்ளனர். அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள கால அவகாசம் உள்ளது. அவ்வாறு மாறவில்லையெனில் அவர்க ளுக்கு எதிராக மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM